search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம் தற்கொலை"

    ராஜபாளையம் அருகே மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். #suicide

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நாயுடு தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 27). பால் கறவை தொழிலாளியான இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், மகிழன் என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுப்பழக்கத்திற்கு கிருஷ்ணகுமார் அடிமையானார். இதையடுத்து அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து குடும்பத்தினர் சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து குடிப்பழகத்தை கைவிட்ட கிருஷ்ண குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகுமார் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் இருந்த கிருஷ்ணகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கிருஷ்ணாபுரம்- தளவாய்புரம் பகுதியில் உள்ள கொல்லங்குடி விலக்கில் உள்ள தனியார் ரைஸ் மில் ரோட்டில் கிருஷ்ணகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல்அறிந்த சேத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினார்.

    மதுப்பழக்கத்தை கைவிட முடியாத நிலையில் கிருஷ்ண குமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. #suicide

    ராஜபாளையம் அருகே மகன் திருமணத்தன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள வாகைக்குளம் பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் திருமணமான ஒரு மகள் இறந்து விட்டதால் அவரது கைக்குழந்தையை பார்வதி வளர்த்து வந்தார். இந்த நிலையில் முதல் மகனுக்கு திருமணமாகாத நிலையில், இளைய மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கு பார்வதி எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் அதையும் மீறி நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் 2-வது மகனுக்கு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்காத பார்வதி இருக்கன்குடிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் நேற்று வாகைக்குளம்பட்டி அருகில் உள்ள கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் பார்வதி பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர்.

    பார்வதி தற்கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. மகனின் திருமணத்தன்றே தாய் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×